எந்த ஒரு முயற்சியுமின்றி ஒரு நாளுக்கான வெறுமையை என்னுள் நிரப்பிவிடுகிறது, கடைசி இரவையும் கடைசிப் பகலையும் அணு அணுவாக ரசிக்காமல் அவசரமாய் காலி செய்த இருபது ஆண்டுகள் வாழ்ந்த வீட்டின் ஜன்னலில் எதேச்சையாய்தென்படும் யாரோ ஒருவரது முகம்.....
கவிதை -2
இருள் பூசி குளிரேறும் அறையிலின்று பறவைகள் பறந்து விட்ட கூட்டின் வெறுமையாருமற்று தனியேமூலையிலொரு நாற்காலியில் முழங்கால் கோர்த்து அமர்ந்திருக்கிறேன் அறையில் ஒலிக்கிறது கடந்து சென்ற சந்தோஷங்கள் கோபங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் மெல்லியதாய் நினைவு வெளியில் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தும் சிதறியும் நான்பக்கத்தில் அமர்ந்துமெல்ல அணைத்துயாரேனும் என்னை முத்தமிட வேண்டும் என்றிருக்கிறது குழந்தையின் சின்ன உதடுகள் வயதாகித் தளர்ந்த உதடுகள்வாலிப வேக உதடுகள் ஏதேனும் ஒன்றுகுவியும் அந்த உதடுகளில் சிதறிய என்னைச் சேர்த்தெடுக்கசிதைந்த எனக்கு உருக்கொடுக்க....
கவிதை - 3
கபடங்கள் புரியாத வயதுகளை சிதைத்துக் கொன்ற வக்கிரங்களின் நிழல் பிடியிலிருந்து இன்னும் மீளவில்லை எனது இரவுகள்... இப்போது என் பகல்களிலும் படரத் தொடங்கிவிட்டது அந்த நிழல், நேற்று தோளில் விழுந்த ஒரு கை கீழிறங்கிவிடுமோவென பயம் துளிர்த்த நொடியிலிருந்து.
No comments:
Post a Comment